கோவை: ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் தனியார் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். கோவை சீரநாயக்கன்பாளையம் ராதாகிருஷ்ணன் வீதியை சேர்ந்தவர் மதன்குமார் (28). தனியார் வங்கி ஊழியர். திருமணம் ஆகாத இவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாக இருந்தார். தனது செல்போன் மற்றும் லேப்டாப்பில் தினமும் இவர் ஆன்லைனில் பெட்டிங் வைத்து சூதாடி வந்துள்ளார். இதில் அதிக அளவு பணம் கிடைத்துள்ளது.
சமீபகாலமாக இவருக்கு ஆன்லைன் சூதாட்டத்தில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா நோய் பரவல் காலத்தில் 3 லட்ச ரூபாய்க்கு அதிகமாக இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் சம்பாதித்துள்ளார்.