பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே மூன்று கிராமங்களில் மணல் கொள்ளையை தடுக்கும் பொருட்டு தடுப்பு பள்ளம் அமைக்கப்பட்டுள்ளது. பொன்னமராவதி அருகே உள்ள நல்லூர், கூடலூர், திருநாட்டான்பட்டி ஆகிய குண்டாற்று பகுதியில் மணல் கடத்தல் தடுக்கும் விதமாக அணைகள் ஏற்படுத்தியும், பள்ளங்கள் தோண்டியும் மணல் கொள்ளையை தடுக்க பொன்னமராவதி தாசில்தார் திருநாவுக்கரசு, அரசலை ஆர்ஐ மரியசெல்வம், நல்லூர் விஏஓ அகஸ்டின் மற்றும் கிராம உதவியாளர்கள் அப்பகுதியில் ஜேசிபி மூலம் பள்ளம் மற்றும் தடுப்பணைகள் ஏற்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.