சிவகாசி: சிவகாசி அருகே கொத்தனேரி கிராமத்தில் சாலையின் நடுவில் அமைந்துள்ள மின்கம்பத்தை அகற்ற மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி அருகே கொத்தனேரி கிராமத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சாலையின் நடுவே மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. கான்கிரீட் கலவையால் உண்டாக்கப்பட்ட இந்த மின்கம்பம் தற்போது ஆங்காங்கே சிமென்ட் பெயர்ந்த நிலையில் எலும்புக்கூடாகி உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதுடன், வீடுகளில் மின் தடை ஏற்படும் நேரங்களில் அவற்றின் மீது ஏறி பணி செய்ய மின் ஊழியர்கள் மறுக்கும் சூழல் உள்ளது.