குளித்தலை: கரூர் மாவட்டத்தில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அடுத்து இரண்டாம் நிலையிலுள்ள தலைமை அரசு மருத்துவமனை குளித்தலை ஆகும். குளித்தலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் பொது மருத்துவம், மகப்பேறு மருத்துவம், சித்த மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவத்திற்கு இந்த மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனை மாவட்டத்தில் இரண்டாவது மருத்துவமனையாக இருப்பதால் தற்போது கூடுதல் படுக்கை வசதி கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.மேலும் அனைத்து வசதிகளும் உள்ள இந்த மருத்துவமனையை தூய்மைப்படுத்தும் வகையில் ஒப்பந்த பணியாளர்களை வைத்து தினந்தோறும் தூய்மை பணி நடைபெற்று வருகிறது. இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான தெரு நாய்கள் உலா வருவதாக தெரிய வருகிறது.