காஞ்சிபுரம், அக்.31: கொரோனா விதிகளை மீறி, காஞ்சி. காமாட்சி அம்மன் கோயிலில் பொன்.ராதாகிருஷ்ணன் தரிசனம் செய்தார். இதனால் பக்தர்களும், பொதுமக்களும் அதிருப்தியடைந்தனர். முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், சித்திரகுப்தர், குமரகோட்டம் முருகன், ஏகாம்பரநாதர் ஆகிய கோயில்களில் தரிசனம் செய்தார். பின்னர், காமாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றார்.அரசு அனுமதித்த தரிசன நேரம் முடிந்த பிறகு 15 நிமிடம் தாமதமாக கோயிலுக்கு வந்த அவர், 30க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை விதிகளை மீறி, சாமி தரிசனம் செய்தார்.