இஸ்தான்புல்: துருக்கியில் நேற்று ஏற்பட்ட பூகம்பத்தில் 4 பேர் பலியாகினர். 120-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான துருக்கியில் நேற்று சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளிகளாக பதிவானது. இதனால், துருக்கி நாட்டின் மேற்கு பகுதிகள் பயங்கரமாக குலுங்கின. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. குறிப்பாக, இஸ்மிர் நகரில் கட்டிடங்கள் குலுங்கி, இடிந்து விழுந்தன. இவற்றில் சிக்கி 4 பேர் பலியாகினர். 120க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள பலரை மீட்க, மீட்பு பணிகள் தீவிரமாக நடக்கின்றன.