சொல்லிட்டாங்க...

மாநிலத்தில் எனது தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகள் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ளது. - கர்நாடக முதல்வர் எடியூரப்பா

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தியதற்கான காரணம் ஆளுநரின் அலட்சியப்போக்குதான். - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

மத்திய பாஜ அரசு ஆளுநர் மாளிகையை தனது அரசியல் நடவடிக்கைக்கு பயன்படுத்தும் அதிகார அத்துமீறல்களின் கருவியாக பயன்படுத்துவதால் தவறுகள் தொடர்கின்றன. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

இனி வரும் காலத்திலாவது ஆளுநர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் அதிகாரத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும்.- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

Related Stories: