மருத்துவ கல்லூரி இடிந்தது போல் அரசும் உதிர்ந்து போகும்: கமல் ஆவேசம்

சென்னை: நாமக்கல் புதிய அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டிடத்தின் ஒரு பகுதி, நேற்று முன்தினம் திடீரென்று இடிந்து விழுந்தது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில் ஆவேசமாக கூறியிருப்பதாவது: நாமக்கல் மருத்துவ கல்லூரி, கட்டும்போதே இடிந்து விழுந்திருக்கிறது. மக்கள் வரி பணம் 336 கோடி ரூபாய் உருமாறும் கோலம் இது. சட்டமன்ற  தேர்தலுக்குள் கட்டி முடித்து அரசியல் ஆதாயம் தேடும் அவசர கோலமே இந்த  அலங்கோலத்திற்கு காரணம். உயிர் காக்கும் மருத்துவமனை உருவாகும்போதே  உடைந்து போயிருக்கிறது. நினைவிருக்கட்டும், நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள். நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்யாதிருங்களய்யா. மக்கள் நீதி மலர, தக்க தருணம் இதுவே.

Related Stories: