துருக்கி நாட்டில் பலத்த நிலநடுக்கம்: கடல் தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால் சுனாமி எச்சரிக்கை: 4 பேர் உயிரிழப்பு என தகவல்

சாமோஸ்: துருக்கி நாட்டில் கிரீஸின் தோடிகேனெஸ் தீவில் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவவுகோலில் 7.0-ஆக பதிவாகியுள்ளது. உலகில் இயற்கை பேரிடர்கள் அதிகம் ஏற்படும் நாடுகளில் ஒன்றாக துருக்கியும், கிரீஸும் இருந்து வருகின்றன. இந்நிலையில் துருக்கி நாட்டில் கிரீஸின் தோடிகேனெஸ் தீவில் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. கிரீஸ் கடல் பகுதியான ஏஜியன் கடலிலின் 16 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் கிரீஸ் தீவுகள், துருக்கி, பல்கேரியா, வடக்கு மசடோனியா ஆகிய நாடுகளில் உணரப்பட்டது. இதில் அதிகபட்சமாக துருக்கியின் இஷ்மிர் மாகாணத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. கடல் நீர் ஊருக்குள் புகுந்ததை அடுத்து ஏகன் நகரில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கார்கள் வவீட்டு உபயோக பொருட்கள் கடல் தண்ணீரில் அடித்து செல்லப்படும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இஷ்மிர் மாகாணத்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும் 120-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் கீரிஸ் மற்றும் துருக்கியில் இதர பகுதிகளில் பாதிப்பு அதிகம் இருக்கலாம் என கருதப்படுகிறது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள பேரிடர் மீட்புப் படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: