சென்னை: நாமக்கல் மருத்துவக் கல்லூரி கட்டும் போதே இடிந்து விழுந்து இருக்கிறது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரிக் தெரிவித்துள்ளார். மக்கள் வரிப்பணம் ரூ.336 கோடி உருமாறும் கோலம் இது. தேர்தலுக்குள் கட்டி முடிந்து அரசியல் ஆதாயம் தேடும் அவசரக் கோலமே இந்த அலங்கோலத்துக்கு காரணம். உயிர் காக்கும் மருத்துவமனை உருவாக்கும் போதே உடைந்து போயிருக்கிறது. நினைவிருக்கட்டும். நினைவிருக்கட்டும்... நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள். நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்யாதிருங்களய்யா. மக்கள் நீதி மலர… தக்க தருணம் இதுவே எனவும் குறிப்பிட்டுள்ளார்.