ராய்ப்பூர், சட்டீஸ்கரில் கொரோனா தொற்றால் பாதித்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன.சட்டீஸ்கர் மாநிலத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 1,81,583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் காரணமாக இதுவரை 1,936 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில், ராய்ப்பூரை சேர்ந்த 28 வயதான கர்ப்பிணி பெண் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் அகில இந்திய மருத்துவக் கழக மருத்துவமனையில் (எய்ம்ஸ்) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.