அகமதாபாத்: குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இன்று ஆறுதல் கூறினார். நாளை ஒற்றுமை சிலைக்கு மரியாதை செலுத்தி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் அக். 31ம் தேதி நாடு முழுவதும் ‘ஏக்தா திவாஸ்’ அணிவகுப்பு நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. குஜராத் மாநிலம் நர்மதா ஆற்றின் கரையில் அமைக்கப்பட்டுள்ள ‘ஒற்றுமை சிலை’க்கு (சர்தார் வல்லபாய் படேல்) அஞ்சலி செலுத்தப்படும். இந்நிலையில், சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ‘ஏக்தா திவாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று டெல்லியில் இருந்து 2 நாள் பயணமாக குஜராத் சென்றார்.