7 தமிழர் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்கும் வரை அனைவரையும் பரோலில் விடுதலை செய்ய வேண்டும் : எம்.பி. ரவிக்குமார்

சென்னை: 7 தமிழர் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்கும் வரை அனைவரையும் பரோலில் விடுதலை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிக்குமார் வலியுறுத்தி உள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் தமது ட்விட்டர் பக்கத்தில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதென்ற தமிழக அமைச்சரவையின் பரிந்துரைமீது முடிவெடுக்காமல் காலந்தாழ்த்துவது சரியல்ல என உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தும் ஆளுநர் முடிவெடுக்காததால், முடிவெடுக்கும்வரை அவர்களை பரோலில் விடுவிக்கத் தமிழக அரசு முன்வரவேண்டும் என்றார்.

Related Stories: