அகமதாபாத் : குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தின் கெவாடியாவில் ஆரோக்யா வன் எனப்படும் மூலிகை பூங்காவை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.இந்த பூங்காவில் நூற்றுக்கணக்கான மருத்துவ தாவரங்கள் மற்றும் மூலிகைகள் உள்ளன. அவற்றின் பயன்பாடு மற்றும் முக்கியத்துவம் பற்றிய தகவல்களையும் இந்த பூங்கா வழங்குகிறது. மூலிகை பூங்காவை திறந்த வைத்த பின், பிரதமர் மோடி அதனை பார்வையிட்டார். அவருடன் முதல்வர் விஜய் ரூபானி, ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் ஆகியோரும் உடன் இருந்தனர்.