×

கடந்த 24 மணி நேரத்தில் 563 பேர் பலி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80.88 லட்சமாக உயர்வு...குணமடைந்தோர் விகிதம் 91.15% ஆக உயர்வு

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.21 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 80.88 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 48,648 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 80,88,851 ஆக உயர்ந்தது.
* புதிதாக 563 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,21,090 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 57,386 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 73,73,375 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5,94,386 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* குணமடைந்தோர் விகிதம் 91.15% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.50% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 7.35% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 11,64,648 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
* இதுவரை 10,77,28,088 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Tags : India ,Corona , 563 killed in last 24 hours: Corona infection in India rises to 80.88 lakh ... Healing rate rises to 91.15%
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!