பள்ளியில் படித்தபோது மாணவிக்கு பாலியல் தொல்லை பயிற்சியாளர் ைகது: 9 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்

கோவை: கோவை ராமநாதபுரம் அருகே நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் சாமுவேல் ஜெய்சங்கர் (39). இவர் திறன் மேம்பாட்டு பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி வழங்கியதாக தெரிகிறது.  கடந்த 2011ல் கோவை போத்தனூரில் ஒரு பள்ளியில் திறன் பயிற்சி வழங்க சென்றார்.  அப்போது அங்கே 8ம் வகுப்பு படித்த 13 வயது மாணவியிடம்  செல்ேபான் நம்பரை வாங்கி அடிக்கடி மெசேஜ் அனுப்பி வந்தார். கடந்த 2016 வரை  சாமுவேல் ஜெய்சங்கர் மாணவிக்கு தொடர்ந்து மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். தற்போது அந்த மாணவி கல்லூரி இறுதியாண்டு படித்து வருகிறார். சாமுவேல் ஜெய்சங்கரின் நடவடிக்கையால் அதிர்ச்சியில் இருந்த மாணவி நேற்று முன்தினம்  கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து போக்சோ சட்டத்தில் சாமுவேல் ஜெய்சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர் 3 மாதத்துக்கு முன் திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக வேலூர் சென்றபோது அங்கே மாணவி ஒருவருக்கு பாலியல் ரீதியாக செல்ேபானில் மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார். இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்து  ஜாமீனில் வந்த நிலையில், சாமுவேல் ஜெய்சங்கர் கோவை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவி வைத்திருந்த ஆபாச மெசேஜ் அடிப்படையில் 9 ஆண்டிற்கு பின் ஆதாரங்களை அழிக்காமல்  வைத்திருந்ததால் அவர் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: