×

மூதாட்டியை தாக்கி 50 ஆயிரம் பறித்த பெண் சுற்றிவளைப்பு

சென்னை: நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் சரஸ்வதி தெருவை சேர்ந்தவர் மீனாட்சி (76). இவரது மகன் அமெரிக்காவில் வசிப்பதால், மீனாட்சி தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அருகில் உள்ள வங்கிக்கு சென்ற இவர், 50 ஆயிரம் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார். பின்தொடர்ந்து வந்த ஒரு பெண், வீட்டிற்குள் நுழைய முயன்ற மீனாட்சியை தாக்கி, 50 அயிரத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். மீனாட்சியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர்.

 இதைப் பார்த்த அந்த பெண், மதில்சுவரை தாண்டி தப்பிக்க முயன்றார்.. இதை பார்த்து பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து, கொள்ளைக்கார பெண்ணை சுற்றி வளைத்து பிடித்தார்.தகவலறிந்து வந்த நுங்கம்பாக்கம் போலீசார், அந்த பெண்ணை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், சாலிகிராமத்தை சேர்ந்த ரெஜினா பானு (28) என்றும், இவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 50 ஆயிரத்தை மீட்டு மீனாட்சியிடம்  ஒப்படைத்தனர்.

Tags : Surrounding woman who attacked grandmother and stole 50 thousand
× RELATED சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று...