மதுரை: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மாஜி அதிமுக எம்எல்ஏவின் ஜாமீன் மனு 3வது முறையாக தள்ளுபடியானது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்தவர் நாஞ்சில் முருகேசன். அதிமுக முன்னாள் எம்எல்ஏவான இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி இவர் ஏற்கனவே 2 முறை ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுக்களை திரும்ப பெற்றதால் தள்ளுபடியானது. இந்நிலையில் தனக்கு மீண்டும் ஜாமீன் கோரி 3ம் முறையாக ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார்.