சிறுமிக்கு பாலியல் தொல்லை: அதிமுக மாஜி எம்எல்ஏ ஜாமீன் மனு 3வது முறையாக தள்ளுபடி

மதுரை: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மாஜி அதிமுக எம்எல்ஏவின் ஜாமீன் மனு 3வது முறையாக தள்ளுபடியானது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்தவர் நாஞ்சில் முருகேசன். அதிமுக முன்னாள் எம்எல்ஏவான இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி இவர் ஏற்கனவே 2 முறை ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுக்களை திரும்ப பெற்றதால் தள்ளுபடியானது. இந்நிலையில் தனக்கு மீண்டும் ஜாமீன் கோரி 3ம் முறையாக ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், வழக்குப்பதிவு ெசய்து 90 நாட்களுக்கு மேலாகியும், இதுவரை போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. புகார் அளித்த பெண்ணை மனுதாரர் மீட்டுக் கொண்டு வந்தார். அதனால், தூண்டுதலின் பேரில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என வாதிடப்பட்டது. அரசுத் தரப்பில், ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, மனுதாரர் தரப்பு தேவைப்பட்டால் விசாரணை நீதிமன்றத்தில் மனு செய்து பரிகாரம் தேடிக்ெகாள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: