சென்னை: மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறிய சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தர தாமதமானதால் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தமிழக அரசு அனுப்பிய சட்ட மசோதா மீது முடிவு எடுக்க மேலும் 4 வார காலம் பிடிக்கும் என்று ஆளுநர் கூறியிருந்தார். நீட் தேர்வினால் அரசுப்பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்ததை அடுத்து, அவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்ட முன் வடிவு தாக்கல் செய்யப்பட்டு அனைவரும் ஒப்புதல் அளித்ததை அடுத்து மசோதாவானது.