சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு அரசாணையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசாணையை மேற்கோள் காட்டி மருத்துவ கலந்தாய்வை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. நீதிமன்ற அனுமதி கிடைத்தவுடன் மருத்துவ கலந்தாய்வை தமிழக அரசு நடத்தும் என தகவல் வெளியாகியுள்ளது.