வாஷிங்டன்: அமெரிக்க பொதுத்தேர்தல் வாக்குபதிவிற்கு முந்தைய தேர்தலில் 7 கோடி மக்கள் வாக்களித்து நூற்றாண்டு சாதனைக்கு வித்திட்டுள்ளனர். இதனிடையே பிரச்சார களமும் சூடுபிடித்துள்ளது. அமெரிக்க அதிபர் பொதுத்தேர்தல் வரும் நவம்பர் 3ம் தேதி நடைபெறவுள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆளும் குடியரசுக்கட்சி சார்பில் மீண்டும் அதிபர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் 77 வயதாகும் ஜோ பைடன் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். தேர்தல் நாளில் மக்கள் வாக்களிக்க இயலாமல் போவதை தவிர்க்கும் வகையில் வாக்குபதிவிற்கு முந்தைய தேர்தல் அங்கே நடைமுறையில் உள்ளன. கொரோனா கலாத்திற்கு சாதகமான இந்த முறையால் அனைத்து மாகாணங்களிலும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். முன்கூட்டிய வாக்குபதிவில் 7 கோடிக்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர். கடந்த அதிபர் தேர்தலில் மொத்தம் 13 கோடியே 60 லட்சம் வாக்குகள் பதிவாகின. இந்த முறை முன்கூட்டிய வாக்குபதிவிலேயே பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வாக்களித்துள்ளனர். அமெரிக்க தேர்தல் வரலாற்றில் 100 ஆண்டுகளுக்கு பிறகு 15 கோடி வாக்குகள் பதிவாக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.