மதுரை: தமிழகத்தில் உள்ள கோயில்களில் சித்த மருந்தகங்களை தொடங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் கோயில்களில் சித்த மருந்தகங்களை அமைக்க உத்தரவிடக்கோரும் வழக்கில் நீதிபதிகள் இத்தகைய கேள்வியை எழுப்பியுள்ளனர். தமிழக கோயில்களில் சித்த மருந்தகங்களை தொடங்க வேண்டும் என்று மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த ஜெயவெங்கடேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். அதில் கோயில்களில் வைத்திய சாலைகளை சோழமன்னர்கள் ஏற்படுத்தியிருப்பதாக தன்னுடைய மனுவில் கூறியிருந்தார்.மேலும், திருப்பதி கோயிலில் சித்த மருத்துவமனைகளுடன், மருத்துவக் கல்லூரியும் உள்ளதாக மனுதாரர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.