மதுரை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து மதுரையில் போலீஸ்காரர் ஒருவர் போஸ்டர் அச்சடித்து ஒட்டியுள்ளார். அதில், ‘பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு 17 கிலோ தங்கம் தந்து அழகு பார்த்த, சோழநாட்டுப் பேரரசி சின்னம்மா சசிகலா அவர்களே, 2021ம் ஆண்டில் தஞ்சை அரண்மனை மன்னர் பேரரசியாக பொறுப்பேற்று தமிழினம் காக்க தமிழ்நாட்டு மக்களை காக்க ஆணையிடு! ஒற்றர் படை போர் படை தற்கொலை படை தயார் நிலையில் உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.