பொன்னேரி: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம் நேற்று பொன்னேரியில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் செய்யது இப்ராகிம், பொன்னேரி நகர தலைவர் நசீர் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் மீஞ்சூர் சிக்கந்தர் பாஷா வரவேற்றார் மாவட்ட துணைத்தலைவர் பதூர்ஜமான் பொதுக்குழுவை துவக்கி வைத்து பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர்கள் நிஜாமுதீன், ஜபுருல்லாஹ், திருவள்ளூர்-நெல்லூர் அனைத்து முஸ்லிம் ஜமாஅத் ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் சீனிஆதிம்கனி, மாணவரணி மாநில தலைவர் பழவை அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.