கல்லூரிக் கல்வி இயக்குநராக பூர்ணசந்திரனை நியமித்த அரசின் உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கல்லூரிக் கல்வி இயக்குநராக பூர்ணசந்திரனை நியமித்த அரசின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரி முதல்வர் கீதா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணி மூப்பில் உள்ள தன்னை நியமிக்காமல், பூர்ணசந்திரனை நியமித்ததாக ஐகோர்ட்டில் கீதா வழக்கு தொடர்ந்திருந்தார். கல்லூரி கல்வி இயக்குனர் நியமனத்தில் விதிமீறல், தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்படவில்லை என மனுவில் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இந்நிலையில், உரிய விதிமுறைகளை பின்பற்றி கல்லூரி கல்வி இயக்குனர் பதவி நிரப்பப்பட வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: