இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது... குணமடைந்தோர் விகிதமும் 91% தொட்டது!!

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.20 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 49,881 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 80,40,203 ஆக உயர்ந்தது.

* புதிதாக 517 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,20,527 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 56,480 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 73,15,989 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6,03,687 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 90.99% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.50% ஆக குறைந்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 7.51% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 10,75,760 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

* இதுவரை 10,65,63,440 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Related Stories: