திருவள்ளூர் புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் மத்திய மாவட்ட நிர்வாக குழு கூட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சி.பி.குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கூடப்பாக்கம் இ.குட்டி வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் நயபாக்கம் டி.மோகன், வி.ஜி.ஞானமணி, ஜி.லோகு, கோபிசந்திரன், மாரிமுத்து, செஞ்சி ஜெ.ஜவகர், காட்டுப்பாக்கம் எஸ்.டேவிட், அப்பு, திராவிடன், சுரேஷ், பிரேம், தங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் மாநில நிர்வாகிகள் ஐ.ஏழுமலை, எம்.மாறன், வீரமணி, தளபதி செல்வம், பூண்டி எஸ்.பாபு, பூவை ஆர்.சரவணன், கே.எம்.தர், கே.எஸ்.ரகுநாத், பிரீஸ் பன்னீர், எம்.பி.வேதா, அலெக்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாரி நன்றி கூறினார்.