புதுடெல்லி: டெல்லியில் மஹேந்திரா பார்க் பகுதியில் சுஷில் (29) என்பவர் தனது சகோதரர்களான சுனில் மற்றும் அனில் என்பவர்களுடன் வசித்து வந்திருக்கிறார். அவரது வீட்டிற்கு அருகில் அப்துல் சாட்டர் என்பவரும் வசித்து வருகிறார். பூண்டு வியாபாரியான சாட்டர்ஜிக்கு ஷானாவஸ், ஆஃபாக், சந்த் மற்றும் ஹசீன் என்ற 4 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று சாட்டர்ஜி வீட்டில் அளவுக்கு அதிகமாக சத்தம் வைத்து பாடலை ஒலிக்க விட்டிருக்கின்றனர். அருகிலிருப்பவர்களுக்கு தொந்தரவாக இருப்பதாகக் கூறிய சுஷில் மற்றும் சகோதரர்களுக்கும், சாட்டர் குடும்பத்திற்கும் இடையே சண்டை ஏற்பட்டிருக்கிறது.