குவாலியர்: குவாலியரில் நெருங்கிய நண்பர்களான பாஜகவை சேர்ந்த சிந்தியாவும், காங்கிரசை சேர்ந்த சச்சின் பைலட்டும் திடீரென சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மார்ச் மாதம் காங்கிரசை விட்டு வெளியேறி பாஜகவில் சேர்ந்த ஜோதிராதித்யா சிந்தியா, மத்திய பிரதேச இடைத்தேர்தலில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தனது முன்னாள் நண்பனும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சச்சின் பைலட்டை குவாலியரில் சந்தித்தார். முன்னதாக, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக குவாலியர் - சம்பல் பிராந்தியத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சச்சின் பைலட் ராஜஸ்தானில் இருந்து குவாலியர் வந்தார். தற்போது இருவரும் சந்தித்த செய்தி, மத்திய பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.