தேர்வு கட்டணம் செலுத்திய 1.2 லட்சம் அரியர் மாணவர்கள் தேர்ச்சி: தேர்வு முடிவுகளை வெளியிட்டது சென்னை பல்கலைக்கழகம்..!!

சென்னை: அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி வழங்கி தேர்வு முடிவுகளை சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. ஏப்ரலில் தேர்வு எழுதுவதற்காக கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அரியர் தேர்வெழுத கட்டணம் செலுத்திய 1.2 லட்சம் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை பல்கலைக்கழக அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்க பல்கலைக்கழக ஆட்சிமன்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஏப்ரல், மே மாதங்களில் தேர்வெழுத கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண் வழங்கப்படும். இந்த முடிவு செயல்வடிவம் பெறும் பட்சத்தில் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சுமார் 150 கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெற வாய்ப்புள்ளது.

அரியர் தேர்ச்சி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், சென்னை பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது. அரியர் மாணவர்களுக்கு இன்டர்னல் தேர்விலிருந்து 70%, முந்தைய தேர்விலிருந்து 30% கணக்கிட அரசு அறிவுறுத்தப்பட்டது. அரியர் தேர்வெழுத கட்டணம் செலுத்திய 1.2 லட்சம் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தேர்வு முடிவுகளை egovernance.unom.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் மதிப்பெண் தேவைப்படுவோர் அடுத்து அறிவிக்கப்படும் தேர்வை எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: