தர்பங்கா: பீகாரில் மாநில வளர்ச்சியை சூறையாடியவர்களை மீண்டும் தோற்கடிக்க மக்கள் தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகாரில் 243 பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 10-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. முதல் கட்டமாக 71 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.71 தொகுதிகளுக்கு நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்பு மற்றும் கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்றி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தர்பங்காவில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிற்கான தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி மேற்கொண்டார்.