×

மும்பை நகாில் டிரோன், ரிமோட் மூலம் இயக்கப்படும் குட்டி விமானங்களை பறக்கவிட போலீசார் தடை

மும்பை: மும்பை நகாில் டிரோன், ரிமோட் மூலம் இயக்கப்படும் குட்டி விமானங்களை பறக்கவிட போலீசார் தடை விதித்துள்ளனர். தீபாவளி போன்ற பண்டிகைகள் நடைபெற உள்ள நிலையிலும், மும்பை தாக்குதல் நினைவு தினம் வர உள்ள நிலையிலும் மும்பையில் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி போலீசார் நகாில் டிரோன், ரிமோட் மூலம் இயக்கப்படும் குட்டி விமானங்களை பறக்கவிட தடை விதித்து உள்ளனர்.

இந்த நிலையில், டிரோன், குட்டி விமானங்கள் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பயன்படுத்த வாய்ப்பு உள்ளதால் போலீசார் இந்த தடையை விதித்து உள்ளனர். இந்த தடை வருகிற 30ம் தேதி முதல் நவம்பர் 28ம் தேதி வரை 30 நாட்கள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மும்பை போலீஸ் அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: 144 தடை உத்தரவின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும் இது வழக்கமாக பிறப்பிக்கப்படும் உத்தரவு தான். ஏற்கனவே 144 தடை உத்தரவு அமலில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Mumbai , Mumbai, drone, ban
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் உயர்வு..!!