ரொம்ப ஓவராகத்தான் நம் மக்கள் செல்கிறார்கள்!: ப்ரீ கருமாதி ஷூட்!

நன்றி குங்குமம்

ப்ரீ வெட்டிங் ஷூட் இப்போது இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. அதாவது திருமணம் செய்து கொள்ளப் போகும் மணமகனும் மணமகளும் இரு வீட்டார் சம்மதத்துடன் தனியாக ஏதேனும் இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசத்துக்கு சென்று போட்டோ ஷூட் நடத்திக் கொள்வார்கள். கேமராமேன் எப்படியெல்லாம் சொல்கிறாரோ அப்படியெல்லாம் போஸ் தருவார்கள். சமயங்களில் இந்த ப்ரீ வெட்டிங் ஷூட் எல்லை மீறுவதும் உண்டு!செல்வந்தர்கள் வீட்டில் மட்டுமே நடந்து வந்த இந்த வைபவம், இப்பொழுது நடுத்தர மக்கள் மத்தியிலும் அத்தியாவசியமான திருமணச் செலவாக இடம்பிடித்துவிட்டது.

இந்நிலையில்தான் இந்த கண்றாவி!இதன் பெயர் ப்ரீ கருமாதி ஷூட்! புரியவில்லையா..? இறந்தபிறகு தங்கள் பிணத்தை எப்படி அலங்கரிக்க வேண்டும் என்பதை தங்கள் உறவினர்களுக்கு எடுத்துச் சொல்ல இப்படி போட்டோ ஷூட் நடத்திக் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். இன்னமும் இது பிரபலமாகவில்லை. ஆனால், எந்த நொடியிலும் சரசரவென மோஸ்ட் வாண்டட் ஷூட் ஆக மாறலாம்.கடவுளின் தேசமான கேரளாவில் இப்படியொரு கூத்து அரங்கேறியிருக்கிறது... அந்தப் படங்கள்தான் இங்கு இருப்பவை!என்ன செய்ய... கலி முத்திடுத்து!

தொகுப்பு: காம்ஸ் பாப்பா

Related Stories: