×

சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை நாளை மட்டும் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை நீட்டிப்பு !

சென்னை: சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக அக்டோபர் 29-ம் தேதி வியாழக்கிழமை அன்று மட்டும் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை மட்டும் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர் விடுமுறை காரணமாக நாளை மட்டும் ரயில் சேவை இரவு 11 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தொடர் விடுமுறை காரணமாக நாளை (வியாழக்கிழமை) மட்டும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவைகள் இரவு 11 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மிலாது நபியை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்கு வசதியாக, சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,public , Chennai, Metro Rail, Service
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...