ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

விருதுநகர்  : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் நான்கு நாட்களுக்கு கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. சதுரகிரி மலையில் தங்குவதற்கும், நீரோடையில் குளிப்பதற்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

Related Stories: