புதுடெல்லி: கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களிடம் வசூலிக்கப்பட்ட 6 மாத கடன் தவணைகளுக்கான வட்டிக்கு வட்டி தொகையை, நவம்பர் 5ம் ேததிக்குள் திருப்பி கொடுக்கும்படி வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது. வங்கிகள், நிதி நிறுவனங்களில் மக்கள் வாங்கிய கடனுக்கான மாதத் தவணையை திருப்பி செலுத்துவதில் இருந்து, கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் 31 வரையிலான 6 மாதங்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்தது. ஆனால், இந்த தவணைக்காக மக்களிடம் வங்கிகள், நிதி றிறுவனங்கள் வட்டிக்கு வட்டி வசூலித்தன. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ரூ.2 கோடி வரையிலான அனைத்து கடன்களுக்குமான 6 மாத தவணைக்கு வட்டிக்கு வட்டி ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.