ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள், பீர் பாட்டில் வீசி சரமாரி தாக்குதல்: இலங்கை கடற்படை அட்டகாசம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கன்போட் ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களின் 20க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளை பறித்து, வெட்டி கடலில் வீசினர். மீனவர்கள் மீது பீர் பாட்டில்கள், கற்களை சரமாரியாக வீசி தாக்கினர். இதில் மீனவர் சுரேஷ் (38) படுகாயமடைந்தார். நேற்று அதிகாலை 2 மணியளவில் ராமேஸ்வரம் துறைமுகம் வந்து சேர்ந்த மீனவர்கள் இது குறித்து படகு உரிமையாளர்கள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். படுகாயமடைந்த மீனவர் சுரேஷ், தங்கச்சிமடம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய, மாநில புலனாய்வுத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: