சென்னை: தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நேற்று 70,687 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 2,522 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைச் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 14 ஆயிரத்து 235 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 1,518 பேர் ஆண்கள். 1,004 பேர் பெண்கள். தற்போது 4 லட்சத்து 31 ஆயிரத்து 112 ஆண்கள், 2 லட்சத்து 83 ஆயிரத்து 901 பேர் பெண்கள், 32 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 4,029 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 6 லட்சத்து 75 ஆயிரத்து 518 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.