சத்தியமங்கலம்: கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்தவர் கந்தவேல் (48). இவரது மனைவி ரமா பிரபா (41). இவர்களுக்கு அருண் (16) என்ற மகன் உள்ளார். கந்தவேல், சென்னை வண்டலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இதன்காரணமாக அவர்கள் குடும்பத்துடன் வண்டலூரில் வசித்து வந்தனர். அருண் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். செல்போன் கேம் விளையாட்டிற்கு அடிமையானதால், கடந்த 2019ம் ஆண்டு பள்ளிப்படிப்பை நிறுத்தினார். ஆனால், அருண் செல்போனில் பப்ஜி கேம் விளையாடி மனநிலை பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டதால், சூலூருக்கு வந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.