ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடி காங்கயம் ரோடு ரோஜா நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (65). இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதற்காக அவர் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 23ம் தேதி பிரகாஷ் அங்கிருந்து ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பிரகாஷ் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். சிகிச்சைக்காக 2 லட்சத்து 25 ஆயிரம் ஏற்கனவே செலுத்தி உள்ளனர். மீதமுள்ள ₹2 லட்சத்து 60 ஆயிரம் கட்டணத்தை செலுத்தினால்தான் உடலை ஒப்படைக்க முடியும் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியதாக தெரிகிறது.