×

பெரியார் சிலை அவமதிப்பு திமுக போராட்டம்

சின்னாளபட்டி: திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் பங்காருபுரத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் வளாகத்தில் பெரியார் சிலை உள்ளது. நேற்று முன்தினம் இரவு சிலை மீது, யாரோ காவி சாயத்தை ஊற்றி விட்டு சென்று விட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், காவி சாயத்தை அகற்றி சுத்தம் செய்தனர். பின்னர் சிலைக்கு கருப்பு பெயின்ட் அடித்தனர். தகவலறிந்து திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ உள்பட நிர்வாகிகள் நள்ளிரவு 11 மணியளவில் அப்பகுதியில் குவிந்தனர். ‘‘சிலையை அவமதித்தவர்களை உடனடியாக கைது செய்யாவிட்டால் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என எம்எல்ஏ தெரிவித்தார்.  போலீசாரை முற்றுகையிட்டு திமுகவினர் கோஷமிட்டனர். ரெட்டியார்சத்திரம் பஸ் ஸ்டாப் அருகே திமுக, திக சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags : DMK ,protest ,Periyar , DMK protest against Periyar statue insult
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்