திருச்சி: திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை கும்பல் தலைவன் முருகன் நேற்றுமுன்தினம் இரவு பெங்களூரு மருத்துவமனையில் திடீரென இறந்தான். திருச்சி லலிதா ஜூவல்லரியின் சுவரை துளையிட்டு கடந்தாண்டு அக்டோபர் 2ம் தேதி 13 கோடி மதிப்பிலான 29 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட து. இது தொடர்பாக கொள்ளை கும்பல் தலைவன் முருகன், திருவாரூரை சேர்ந்த மணிகண்டன், கனகவள்ளி, அவரது மகன் சுரேஷ், மதுரையை சேர்ந்த கணேசன் ஆகியோரை கோட்டை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களில் முருகன் மீது தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில் 100 வழக்குகள் உள்ளது. இதனால், பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.