செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை. தமிழக அரசு சார்பில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், தோல்வியடைந்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.600 வழங்கப்படுகிறது. அதேபோல் பிளஸ் 2 தேர்ச்சி, பட்டயம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது.செங்கல்பட்டு மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற, காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவடைந்து இருக்க வேண்டும். இதில் மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பு மற்றும் வருமான வரம்பு கிடையாது. இதனை பெற, ஏற்கனவே வேலை வாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பெற்றிருக்கக் கூடாது.