சார் பதிவாளர் மீது வழக்குப்பதிவு: லஞ்சம் ஒழிப்புத்துறை நடவடிக்கை

சென்னை: சென்னை பம்மல் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிகளவில் லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்படி கடந்த 17ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், பம்மல் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத ரூ.13,780 சிக்கியது. இதுகுறித்து சார் பதிவாளர் அலுவகத்தில் இருந்த சார் பதிவாளர் தினேஷ் (45), உதவியாளர்கள் ஜாபர், வரபிரசாத் (33), ரஞ்சித் (30), ராமமூர்த்தி, டேடா என்ட்ரி ஆபரேட்டர் உமாமகேஸ்வரி, முருகன் உள்பட 12 பேரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் அவர்கள், முறையான பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, கைப்பற்றப்பட்ட பணம் லஞ்சம் வாங்கியது என தெரியவந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், சார் பதிவாளர் தினேஷ் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: