மண் சரிந்து தொழிலாளி பலி

புழல்: சோழவரம் அடுத்த காரனோடை பகுதியை சேர்ந்தவர் நாகவள்ளி(50). இவர் காரனோடை பஜார் பகுதியில் புதியதாக கடை கட்டுவதற்கு பூமி பூஜை போட்டு பணிகளை தொடங்கினார். நேற்று முன்தினம் புதிய கட்டிடம் கட்டும் பணியில் புழல் கதிர்வேடு காந்தி தெருவை சேர்ந்த வில்லாளன்(56) உட்பட 4 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது, பள்ளத்தில் இறங்கி மண்ணை அப்புறப்படுத்தி கொண்டிருந்த வில்லாளன் மீது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து விழுந்தது. இதில் வில்லாளன் படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புகாரின்பேரில் சோழவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: