சென்னை: தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க பொது செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் பிறந்து தமிழக அரசின் பாடத்திட்டத்தை பயின்று வரும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டத்திட்டங்களை இயற்ற வேண்டும். குறைந்தபட்சம் அரசு பள்ளி மாணவர்கள் போல் தனியார் பள்ளியில் படிக்கும் தமிழ்வழி மாணவர்களுக்கும் எம்பிபிஎஸ் சேர்க்கையில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.