சென்னை: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழர் வீரத்திற்கும், எதற்கும் விலைபோகாத விசுவாசத்திற்கும் தனிப்பெரும் அடையாளங்களான மாவீரர்கள் மருது சகோதரர்கள் மண்ணில் விதைக்கப்பட்டனர். குருபூஜை நாளில் மருது பாண்டியரைப் போற்றி, அவர்கள் வழியில் சாதி, மதம் பார்க்காமல் நம் தேசத்தையும், மக்களையும் நேசித்திடுவோம். வீரத்தையும், தியாகத்தையும் தூக்கிப்பிடித்து, துரோகத்தை வேரறுத்து, தீயவற்றை வீழ்த்தி வென்று காட்டுவோம். இவ்வாறு கூறியுள்ளார்.