காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் திருமுக்கூடலில் இருந்து சென்னை கோட்டையை முற்றுகையிட நடைபயணமாக செல்ல முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்துள்ளனர். உள்ளாவூர் பகுதியில் பாலாற்றில் தடுப்பணை கட்டுவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு 42 கோடி ரூபாய் மதிப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். ஆனால் உள்ளாவூரில் தடுப்பணை காட்டாமல் திருமுக்கூடலில் தடுப்பணை கட்டப்பட்டிருப்பது விவசாயிகளில் குற்றச்சாட்டாகும். இதனை கண்டிக்கும் வகையில் கோட்டையை முற்றுகையிட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் புறப்பட்டனர்.