சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி பார்கள் திறக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. கொரோனாவால் பார்கள் இயங்க அனுமதிக்கப்படாத சூழலில் 24 மணிநேரம் பார்கள் இயங்கி வருவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூர், கொரட்டூர், பாடி மற்றும் அம்பத்தூரில் தடையை மீறி பார்கள் இயங்கிவருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.