டெல்லி: முதுநிலை பல் மருத்துவப்படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு டிசம்பர் 16-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் மாணவர்கள் சேர நீட் என்னும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதன்படி, இந்த கல்வி ஆண்டு மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு கொரோனா காரணமாக செப்டம்பர் 13ம் தேதி நடத்தப்பட்டது. தொடர்ந்து, நீட் தேர்வு முடிவுகள் கடந்த 16-ம் தேதி வெளியிடப்பட்டது.